உனது காதல் அன்பு நேரப்போக்கிற்காக இருக்கலாம். ஆனால் நான் உனது நினைவுகளால் வாழ்ந்து மடிந்து போவேனே தவிர வேறு ஒருவரிடம் இந்த மனது மடியாது என்று நான் ஒரு ரில்ஸ்ல கமெண்ட் பன்னி இருந்தேன். அதில் ஒரு பெண் லைக் செய்து இருந்தால்.
அன்றைக்கு இரவே அவளிடம் இருந்து ஒரு செய்தி வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்தது நமக்கு இங்கிலிஷ் கொஞ்சம் வீக் அப்புறம் கூகுள் டிரென்ஸ்லெட் ஐடியா கேட்டு மறுபடியும் செய்தி அனுப்பினேன் உடனே எனக்கு மறுசெய்தி வந்தது.
பொதுவாக மனிதர்கள் மெசேஜ்க்கு ஆன்லைன் இருந்து கொண்டே மெதுவாக ரிப்ளை பன்னுவது எனக்கு பிடிக்காது அவர் போன் பார்கவில்லை என்றால் பரவாயில்லை சிலர் அப்படி இருப்பார்கள். உடனே ரிப்ளை வந்து நமக்காக நேரத்தை ஒதுக்கி நம்மிடம் பேச தவிர்க்கிறார்கள் என்றால் நாமும் கண்டிப்பாக பேச வேண்டும் என்று நானும் மறுபடியும் செய்தி தமிழில் அனுப்பினேன்.
அவள் மறுபடியும் ஆங்கிலத்தில் பேசினால் நான் நேரடியாக சொல்லிட்டேன் எனக்கு ஆங்கிலம் வாசிக்க தான் தெரியும் அதற்கு மீனிங் தெரியாது என்று அனுப்பினேன். அவள் பரவாயில்லை என்று அனுப்பி தமிழில் பேசினால் அவள் மலேஷியா என்றால்.
அவள் சும்மா சொல்லுறாலா இல்லை கதை விடுகிறாலோ என்று யாருக்கு தெரியும் நான் நமக்கென்று ஓர் உன்மையான உறவு கிடைத்தால் போதும் என்று பேச ஆரம்பித்தேன் இருவரும் மாறி மாறி தகவல்களை பரிமாறிக் கொண்டோம்.
அவளும் என்னிடம் போட்டோ கேட்கவில்லை நானும் அவளிடம் போட்டோ கேட்கவில்லை ஒரு கட்டத்தில் எனக்கும் ஒரு தயக்கம் அவள் ஆணா இல்லை பெண்ணா என்று சரி ஒரு தடவை வாய்ஸ் மெசேஜ் பன்னுவிங்களா கேட்டேன் அவள் அதுக்கென்ன பன்னுற என்றால் உங்களுக்கு எந்த பாடல் பிடிக்கும் சொல்லுங்க அந்த பாட்டே பாடுறன் என்றால்.
உடனே நான் என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா என்னை கொன்றுவிட்டு போகும் மலரே வா வாழ்க்கையின் உயிரே வா ஜீவா என்றேன். அவள் அய்யோ இது எனக்கு தெரியாதே என்றால் வேற சொல்லுங்க என்றால் நான் உனக்கு தெரிஞ்சதை பாடு என்றேன்.
அவள் சரி என்று ஒரு வாயிஸ் மெசேஜ் அனுப்பினாள் முதல் தடவை அவளது குரல் ஓசையை கேட்க ஆவலில் ஹெட்போன் காதில் மாட்டி கொண்டு அவளது மெசேஜ் ஆன் பன்னிட்டு கண்களை முடினேன்.
அவள் நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை இது நியாயமா ! மனம் தாங்குமா! என் ஆசைகள் அது பாவமா! என்று பாடினால் அவளது குரலின் ஓசையியும் அந்த பாடலின் வரிகளும் கேட்டு எனது கண்களில் ஈரம் வடிந்தது.
எப்படி இருக்கு கேட்டு செய்தி அனுப்பினாள் நான் ஒரு நிமிடம் பதில் அனுப்பாமல் மௌனமாக இருந்தேன் அவள் மறுபடியும் மறுபடியும் ஓய் ஓய் என்னாச்சு தகவல் அனுப்பினால் நான் அதன் பிறகு சொல்ல வார்த்தை இல்லை உங்கள் குரலினால் மெய்மறந்து போனேன் என்றேன் அவள் ஓகோ என்றால் நேரம் தெரியாமல் பேசிக்கொண்டு மணி 3 ஆகிவிட்டது சரி நாளைக்கு பேசுங்க நீங்க இப்போது தூங்குங்க என்றால்.
நான் சரியென்று அவளது முகங்கள் எப்படி இருக்கு அவளது கண்கள் எப்போது காண போகிறேன் என்று நினைத்து கொண்டே தூங்கி விட்டேன். அடுத்த நாள் காலையில் எழும்பி போன் பார்த்தேன் அவளிடம் எந்த தகவல் இல்லை சரியென்று நானும் குட்மார்னிங் போட்டு அவளிடம் எப்போதும் தான் மறுசெய்தி வரும் என்று ஏங்கி கொண்டு இருந்தேன்.
ஏந்த செய்தி மெசேஜ் வந்தாலும் அவளாக தான் இருக்கும் என்று உடனே போன் பார்த்தேன் ஏமாற்றம் தான் கிடைத்தது.
நான் இப்படி யாரும் மெசேஜ் க்கு தவிர்த்தது கிடையாது ஒரே நாளில் என்னிடம் பேசி இப்போது தனியாக தவிர்க்க விட்டால் எனக்கு அவ்வப்போது போன் பார்த்து பார்த்து முகம் வாடியது சரியென்று எல்லாம் நோட்டுபிகேசன் ஆப் பன்னி விட்டு போன் தூக்கி போட்டு என்னை நான் தேடினேன்.
எதற்கு இப்படி அடுத்தவர் பேசுவார்கள் என்று ஏங்கி கொண்டு இருக்கிற என்று கோபம் எழுந்தது சரி மெசேஜ் வந்தால் பேசு இல்லையென்றால் யாரையும் தேட கூடாது முடிவு பன்னினேன்.
போனில் யூடியூப் பார்த்துக் கொண்டு இருந்தேன் அவளிடம் இருந்து தகவல் வந்நது சாரி நல்ல தூங்கிட்டேன் என்றால் மறுபடியும் பேச ஆரம்பித்தோம் இப்படியே போனது தினமும் நடந்ததை என்னிடம் பகிர்ந்து கொள்வது அவள் காட்டிய அன்பு பாதை என்னை எங்கேயோ அழைத்துச் சென்றது.
ஒரு கட்டத்தில் அவளே என்னை நேரில் பார்க்க ஆசை படுகிறேன் என்றால் நான் போட்டோ அனுப்புகிறேன் என்றேன் அவள் இல்லை இல்லை நேரில் பார்ப்பது தான் தனி இன்பம் என்றால் உங்களை நேரில் பார்த்து நிறைய பேசனும் என்றால்.
நான் எப்படி நீங்க மலேசியா நான் இந்தியா நான் அங்கே வருவதற்குள் பல வருடங்கள் ஆகும் என்றேன் அவள் ஏன் என்று கேட்டால் நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன் நானே தினமும் டீ காபி குடிக்க சரியா போகும் இதுல மலேசியா வருவதற்குள் விடிந்து விடும் என்றேன்.
அவள் சிரித்து விட்டு எனக்கு அங்கு வருவதற்கு நேரம் இருக்காது நீங்க இங்கே வருவிங்களா சொல்லுங்க டிக்கெட் நான் போடுகிறேன் என்றால் நான் சரி என்றேன். ஏற்கனவே சும்மா பாஸ்போர்ட் எடுத்து வைத்து இருந்தேன் இப்போது தான் அது தேவை படுகிறது என்று மனதில் நினைத்தேன்.
அவள் எப்போது நீங்க பிரியா இருப்பிங்க சொல்லுங்க நான் அந்த தேதியில் டிக்கெட் போடுகிறேன் என்றால் நான் ஒரு பேச்சுக்கு நாளைக்கே போட்டாலும் வந்திடுவேன் என்று சொல்லிவிட்டேன். அவளும் சிரித்துக்கொண்டே சரி என்றால் ஒரு பத்து நிமிடம் கழித்து எனக்கு டிக்கெட் அனுப்பி விட்டாள்.
நான் வியப்புடன் என்ன நாளைக்கே டிக்கெட் போட்ட பெமி என்றேன் அவள் ஆமா நீங்க தானே சொன்னிங்க எனக்கு உங்களை பார்க்க ஆர்வம் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அதற்காக நாளைக்கே போட்டேன் என்றால் நான் எதுவும் எடுத்து வைக்கவில்லை எப்படி என்றேன்.
அவள் நீங்க எதுவும் எடுத்திட்டு வர வேணாம் இங்கே வாங்க எல்லாம் வாங்கிக்கலாம் என்றால் வருவதற்கு தேவையான பேப்பர் மட்டும் கொண்டு வாங்க போதும் நான் ஏர்போர்ட் வந்து உங்களை கூப்பிட்டு போறேன் என்றால்.
நான் என்னடா பொசுக்குனு டிக்கெட் போட்டா போகவா வேனாமா என்று யோசித்தேன் பேசியே கொஞ்சம் நாள் தான் ஆகுது என்றேன் சரி நம்மீது இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறார்கள் பாசம் வைத்து இருக்கிறாள் அவளை நம்பி போகலாம் அப்படியே ஏமாற்றி விட்டாலும் அந்த நினைவுகளோடு அங்கே மடிந்து விடனும் என்று தைரியத்தில் கிளம்பினேன்.
அடுத்த நாள் அவளை கான வேண்டும் ஆவலிலும் முதல் தடவை பறக்க போகிறேன் என்ற சந்தோஷத்தில் எனது பயணத்தை தொடங்கினேன் நேராக ஏர்போர்ட் போயிட்டு எல்லாம் முடித்து விட்டு கடவுளை வேண்டிவிட்டு ஏரோபிளைன்ல ஏறினேன்.
அவள்: நீ உன் லொக்கேஷன் எனக்கு ஷேர் பன்னு என்றால்.
நான்: சரி என்றேன் ஹே பெமி வந்துருவல எனக்கு அங்கேயே ஒன்னும் தெரியாது வந்துவிடு என்றேன்.
அவள்: சிரித்துக்கொண்டே இப்படியே குழந்தை மாதிரி பேசி என்னை மடக்கிட்ட கல்யாணம் பன்னக்கூடாது இருந்த நீ ஏதோ பேசி என்னை மயக்கிட்ட கேடி நான் அங்க வந்துவிடுவேன் கவலை படாதே flightல பொண்ணுங்க இருப்பாங்க சைட் அடிச்ச செத்த மகனே என்று சிரித்தாள்.
நான்: சிரித்துக்கொண்டே நல்லா தான் இருக்காங்க இருந்தாலும் முகத்தில் கலர் கலரா அடிச்சி இருக்காங்க நமக்கு அந்த கலர் செட் ஆகாது என்றேன்.
அவள்:சரி சரி சைட் மட்டும் அடிச்சிக்கோ என்றால்.
நான்:சரி என்றேன். நீ என்ன கலர் டிரஸ் கேட்டேன் அவள் ஸ்கை புளு என்றால்
அவள்:நீ என்ன கலர் என்று கேட்டாள்.
நான்: லைட் கிரின் என்றேன்.
அவள்: சரி நான் வெளியே தான் இருக்கேன் நீ இறங்கிட்டு எனக்கு போன் பன்னு என்றால் நான்: மனதில் எனது காதல் இளையராணியை பார்க்க ஆகாயத்தை நோக்கி விமானத்தில் பறந்தேன் அவள் எப்படி இருப்பாள் அங்கே அவளை பார்த்து என்ன பேச என்று ஒரே யோசனை இப்போது எதுவும் யோசித்தால் அவளை பார்த்ததும் எல்லாம் மறந்து விடு எதற்கு யோசித்துவிட்டு மனதில் தோன்றியதை அப்படியே பேசிரனும் என்று முடிவு பன்னினேன் கொஞ்சம் நேரத்தில் விமானம் தறையிரங்கியது.
அவளே எனக்கு மெசேஜ் அனுப்பினாள்.
அவள்: விமானம் வந்து விட்டது நீ எங்கே இருக்க என்று கேட்டாள்.
நான்: இந்த இடத்து பக்கத்தில் இருக்கிறேன் என்றேன்.
அவள்:நீ அங்கேயே இரு வாரேன் என்றால்.
கொஞ்சம் நேரத்தில் அவள் சொன்ன நிற ஆடையில் ஒரு பெண் என்னை நோக்கி சிரித்துக்கொண்டே வந்தால் பார்க்க மிகவும் அழகாக மென்மையான புன்னகை.
நானும் வெட்கத்தில் சிரித்துக்கொண்டே வாங்க எப்படி இருக்கிங்க என்று கேட்டேன்.
அவள்: நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்று கேட்டாள்.
நான்: மனதில் அய்யோ இது அவளது குரல் இல்லை இது வேற யாரோ நினைக்கிறேன் என்று நினைத்து நீங்க பெமி தானே என்று கேட்டேன்.
அவள்: ஆமா இதில் என்ன சந்தேகம் நான் பெமினா தான் என்றால்.
நான்; எனக்கு உறுதியாகிவிட்டது இது அவளது குரல் இல்லை நான் கற்பனையாக நினைத்த பெண் இவள் இல்லை என்று இது வேறு யாரோ.
அவளிடம் இல்லை நீங்க பெமி இல்லை அவள் வாய் மெசேஜ் ஒரு தடவை பேசி இருந்தாலும் நான் அவளது குரலை 100 தடவை மேல் கேட்டு இருக்கிறேன் நீங்க இல்லை அவளை எங்கே என்று கேட்டேன்.
அவள்: நான் தான் பெமி இந்தா போன் பாருங்க என்று என்னிடம் பேசிய மெசேஜ் காட்டினால் வாங்க முதலில் என்றால்.
நான்; இல்லை இல்லை என்று சொல்லி கொண்டே வெளியில் ஒரு கார் பக்கத்தில் வந்தேன் அங்கே ஒரு பெண் நின்றாள் அவள் சேலையில் இருந்தால். அவள் என்னிடம் என்ன பிரச்சினை என்று கேட்டாள் நான் திரும்பி அவளது விழிகளை பார்த்தேன் வெட்கத்தில் இமைகள் அங்கும் இங்கும் ஓடியது உதடுகள் ஏதோ மறைத்தது அதுவும் இந்த குரல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு என்று அவளிடம் நீங்க தமிழா கேட்டேன்.
அவள்: ஆமா உங்களுக்கு எதுவும் உதவி வேனுமா கேட்டாள்.
நான்: நீ தானே பெமி என்று சிரித்து அவளது கையை பிடித்தேன் அவள் எதுவும் பேசாமல் அப்படியே என்னை கட்டி பிடித்தாள் இரண்டு நிமிடம் எதுவும் பேசவில்லை அப்படியே அனைத்து இருந்தால்.
எப்படி இருக்கிங்க என்று கேட்டு எனது முகத்தை பார்த்தால் ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது. என்னை கூப்பிட வந்த பெண்ணிடம்.
அவள்: பார்த்தியா என் ஆல் யாருக்கும் மயங்க மாட்டான் அவன் மிகவும் தனித்துவம் என்னை மாதிரி அதனால் தான் அவனிடம் நான் விழுந்தேன் என்று சொல்லி எனது கை இடுக்கில் அவளது கையை கோர்த்தால்.
அவளது தோழி: ஆமாடி உன்மையில் உன் ஆல் நான் பேசியதும் உடனே கண்டு பிடித்து விட்டான். பார்க்காம உனது குரலை மட்டும் வைத்து உன் மீது எவ்வளவு காதலிக்கிறார் என்பதை எனக்கு புரிந்தது இப்படி ஒரு ஆல் நமக்கு கிடைக்க மாட்டுக்கு எனக்கு ஒன்னு அமைஞ்ச்சி இருக்கு பாரு என்னை தவிர எல்லாத்தையும் பார்த்து சைட் அடிச்சிட்டு கடலை போடுறான் என்று சிரித்தாள்.
நானும் பெமியும் சிரித்தோம்.
பெமி: என்னிடம் மலேசியா உங்களை அன்புடன் வரவேற்கிறோம் போமா சுவிட் பாப்பா என்று எனது வலது கழுத்தோரம் முத்தமிட்டால் நான் வெட்கத்தில் கண்களை மூடினேன் பெமி சும்மா இருபா என்று சிரித்தேன்.
அவளது தோழி:பார்த்துடி கடிச்சி தின்னுறாதா என்று நக்கல் அடித்தால்.
பெமி:எனது தோளில் கை போட்டு என் இளவரசன் நான் என்ன வேனுமானாலும் பன்னுவேன் என்றால்
அவளது தோழி; சரி சரி நீங்க நடத்துங்க வாழ்த்துக்கள் என்று என்னிடம் கை கொடுத்தால்.
இந்த கதை வாசிக்கும் பெண்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் marratamil@gmail. com.
💌 Mail or Google chatல உங்கள் கருத்துக்களை பகிரலாம் இது எனது கடைசி கதை என்று நினைக்கிறேன். நான் எழுதும் கதைகள் அனைத்தும் கற்பனையே எனது மனதில் இருந்த ஆசைகளின் ஏமாற்றத்தை உங்களிடம் பகிர்ந்தேன் அவ்வளவு தான் நன்றி விடைபெறுகிறேன்.